சுகப்பிரசவமோ அல்லது அறுவைச் சிகிச்சை மூலமான பிரசவமோ எதுவாக இருந் தாலும், குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப் பாலைக் கொடுக்கத் துவங்க வேண்டும்.
தன்னுடைய பாலே குழந்தைக்குப் போது மானதா என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு இருப்பதை நான் பார்க்கிறேன். இது தொடர்பான குழப்பங்களும் பெண்களுக்கு ஏற்படுகிறது. முதல் இரண்டு நாள் தாய்க்கு சுரக்கக்கூடிய சீம்பால் மிகச் சிறந்த உண வாகும். குழந்தையின் செரிமானம், மலம் வெளியேறுதல் போன்ற அனைத்திற்கும் சிறந்த வகையில் அந்த சீம்பால் உதவி புரிகிறது. இந்த சீம்பால் தனது குழந்தைக்காகவே இயற்கை படைத்த தனித்துவம் மிக்கது என்பதை தாய்மார்கள் உணர வேண்டியது அவசியம். இதனைக் கட்டாயம் குழந்தைக்கும் புகட்ட வேண்டும் என்ற உளவியல் சிந்தனை வளர வேண்டும்.
தாய்ப்பால் சுரப்பு
தாய்ப்பால் குடித்து வளர்கின்ற குழந்தைக் கும், மாறாக பிற செயற்கை பாலைக் குடித்து வளர்கின்ற குழந்தைக்கும் மிகப் பெரிய வேறு பாடு காணப்படும். செயற்கைப் பாலை அருந்தி வளரும் குழந்தை உடல் பருத்தும், தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தை ஆரோக்கியமான வளர்ச்சியோடு வலுவோடும் இருப்பதைக் காணலாம். பொதுவாகவே சுரக்கின்ற பால் குழந்தைக்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை ஒரு பெண் எவ்வாறு உணர முடியும் எனில், அக்குழந்தை அழாமல் பால் குடித்தல், குறைந்தபட்சம் 2லிருந்து 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழித்தல், ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் 700 கிராம் எடை அதிகரித் தல் போன்றவை குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்கிறது என்பதை உறுதி செய்யும் காரணிகளாகும். குழந்தை தூங்கு கின்ற காரணத்தால் பால் கொடுக்காமல் இருக் கும்போது மார்பு கட்டிப்படும். அந்த அடிப்படையிலும் போதுமான பால் நமக்கு சுரக்கிறது என்பதை ஒரு தாய் உணர முடியும். பொதுவாக குழந்தை எப்போதெல்லாம் அழுகிறதோ அப்போதெல்லாம் பால் கொடுக்க வேண்டும். அது குறைந்தபட்சம் 3 மணி நேரம் என வரையறுத்துக் கொள்ள லாம். அதற்கு மேல் தூங்குகின்ற குழந்தையை எழுப்பி தாய்ப்பால் புகட்ட வேண்டும். அதே போன்று ஒவ்வொரு குழந்தைக்கும் நேர வித்தியாசம் மாறுபடும். ஆகையால் இங்கு தாயின் புரிதலே மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
குறைந்தபட்சம் 6 மாதம்
குழந்தைக்கு பால் புகட்டும்போது ஒரு மார்பகத்தின் முழுப் பாலையும் புகட்டிவிட்டுத் தான் அடுத்த மார்பகத்திற்கு மாற்ற வேண்டும். முதலில் சுரக்கும் பாலில் சில சத்துக்களும், அதற்குப் பிறகு சுரக்கின்ற பாலில் சில சத்துக்களும் நிறைந்திருக்கும். ஆகையால் ஒரு மார்பகத்திலிருந்து புகட்டக் கொடுக்கும் போது, அதனை முழுமையாகக் கொடுத்து விட்டு பிறகே மற்ற மார்பகத்திற்கு மாற்ற வேண்டும். செயற்கைப் பால் கொடுப்பதன் மூலம் செரிமானக் கோளாறுகளோ அல்லது தொற்றுகளோ ஏற்பட வாய்ப்புண்டு. குழந்தைக்கு ஏற்படக்கூடிய வயிற்றுப்போக்கு, சளி, இருமல் மற்றும் நுரையீரலைத் தாக்கக் கூடிய கிருமிகளுக்கு எதிரான சத்துக்கள் தாய்ப்பாலில்தான் அதிகமுள்ளது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய் கள் குறைவாகின்றன. நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகவே இருக்கும். இவற்றையெல்லாம் மனதில் வைத்து, தாய்ப்பால் புகட்ட வேண்டும்.
குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை குழந் தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு பால் புகட்டிய உடன் தோளில் போட்டு முதுகுக்குப் பின்புறம் இதமாய் ஏப்பம் வரும்வரை தட்டிக் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகே குழந்தையை படுக்க வைக்க வேண்டும்.
தாய்ப்பால் புகட்டுவதன் மூலமாக பெண் களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைகிறது. ஆறு மாதத்தி லிருந்து ஓராண்டுகள் வரை புகட்டியவர் களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
2023-ஆம் ஆண்டுக்கான தாய்ப்பால் தின முழக்கமாக, ‘வேலை செய்யும் பெற்றோ ருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்தல்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்துப் பெண்களுமே வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்ற காரணத்தால், தாய்ப்பால் புகட்டுவதை அவர்களிடமும் ஊக்குவிக்க வேண்டும். அதனடிப்படையில், தங்களது தாய்ப்பாலை ஆரோக்கியமான முறையில் சுயமாகவோ அல்லது உறிஞ்சு குழாய் மூலமாகவோ ஒரு சில்வர் பாத்திரத் தில் சேகரித்து வைக்கலாம். பொதுவான தட்ப வெப்பநிலையில் 2 மணிநேரம் வைத்திருந்து குழந்தைக்கு ஏற்ற வசதியில் புகட்டலாம். மேலும் அதே பாலை குளிர்சாதனப் பெட்டி யில் 8 மணி நேரம் வரைகூட வைத்திருந்து பிறகு லேசாக சூடுபடுத்தி குழந்தைக்கு புகட்ட அறிவுறுத்தலாம். மார்பில் பால் கட்டிக் கொண்ட பின்னர் அதனைக் கொடுக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அத னால் ஒன்றும் தவறில்லை. தாராளமாக அந்தப் பாலையும் குழந்தைக்குக் கொடுக்கலாம். இனி வருகின்ற தலைமுறையினர் தங்களது குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு எந்த தேர்வுமில்லை என்ற மனநிலைக்கு நம்மை நாமே தயார்ப்படுத்திக் கொள்வதுடன் தாய்ப்பாலையே பழக்கப் படுத்துவோம்’ என்றார்.